ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு


ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு
x

பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி திடீரென இறந்தார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி கட்டளைத்தெருவை சேர்ந்தவர் பாலையா (வயது 57). இவரை களக்காடு போலீசார் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவருக்கு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த பாலையா நேற்று காலையில் திடீரென மயங்கி விழுந்தார். அவரை சிறை காவலர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story