ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி


ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி
x

ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி பெரம்பலூரில் நடைபெற்றது.

பெரம்பலூர்

பள்ளி கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான 2-ம் பருவத்திற்கான எண்ணும்-எழுத்தும் பயிற்சி பெரம்பலூர் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2 நாட்களாக நடந்தது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஒருங்கிணைத்து பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும், பயிற்சியில் எடுத்து கொண்ட செயல்பாடுகளை பள்ளியில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்று ஆசிரியர்களுக்கு விரிவாக எடுத்து கூறினர். இதில் 91 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) 4, 5-ம் வகுப்புகளுக்கு பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான 2-ம் பருவத்திற்கான எண்ணும்-எழுத்தும் பயிற்சி அந்தந்த ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடக்கிறது.


Next Story