ஆதிதிராவிடர்களுக்கு பெட்ரோல் பங்க் அமைக்க கடன் உதவி


ஆதிதிராவிடர்களுக்கு பெட்ரோல் பங்க் அமைக்க கடன் உதவி
x

ஆதிதிராவிடர்களுக்கு பெட்ரோல் பங்க் அமைக்க கடன் உதவி வழங்கப்படுவதாக நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

திருநெல்வேலி

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் பெட்ரோல் பங்க் அமைத்தால், தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கு www.petrolpumpdealerchayan.in என்ற இணையதளத்தில் வருகிற 27-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அவர்கள் முதல் முறையாக கொள்முதல் செய்யும் பெட்ரோல் அல்லது டீசல் 1 டேங்கர் தொகையை ஆதிதிராவிடர், பழங்குடியினர்களுக்கு குறைந்த வட்டியில் தாட்கோ மூலம் கடனாக வழங்கப்படும். இதுதொடர்பான விவரங்களை தாட்கோ தலைமை அலுவலக மாநில திட்ட மேலாளரை 7358489990 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

1 More update

Related Tags :
Next Story