மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க கடன் உதவி

மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டது.
வேதாரண்யம் நகர கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வங்கி செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் மறைஞாயநல்லூர் பொன்னாங்காட்டை சேர்ந்த மரிக்கொழுந்து மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க ரூ.2 லட்சம் கடன் உதவியை நகர கூட்டுறவு வங்கி தலைவர் (பொறுப்பு) அன்பரசு வழங்கினார். நிகழ்ச்சியில் வங்கி பணியாளர்கள் கண்ணன், மகாராஜன், நகராட்சி மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் செல்லம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





