மணவாளக்குறிச்சி அருகே குருசடியை சூறையாடி உண்டியல் பணம் கொள்ளை மீனவர் கைது


மணவாளக்குறிச்சி அருகே குருசடியை சூறையாடி உண்டியல் பணம் கொள்ளை மீனவர் கைது
x

மணவாளக்குறிச்சி அருகே குருசடியை சூறையாடி உண்டியல் பணம் கொள்ளையடித்த மீனவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே உள்ள தருவை பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சமின் (வயது67). அந்த பகுதியில் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகே அந்தோணியார் குருசடி உள்ளது. இதில் 3½ அடி, 2½ அடி உயரத்தில் அந்தோணியார் சிலைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு குருசடியில் இருந்து சத்தம் கேட்டது. உடனே பெஞ்சமின் கண்விழித்து வெளியே வந்து பார்த்தார். அப்போது பெரியவிளையை சேர்ந்த மீனவர் ஸ்டாலின் (43) என்பவர் குருசடியில் இருந்த சிலைகளை உடைத்து சூறையாடி விட்டு உண்டியலை உடைத்து பணத்துடன் எடுத்து விட்டு தப்பி ஓடினார். இதுகுறித்து பெஞ்சமின் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

---


Next Story