லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி கம்பர் தெருவை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 42). லாரி டிரைவர். இவரது மனைவி ராஜாத்தி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவருக்கும், இவரது அண்ணன்-தம்பிகளுக்கு இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தததாக கூறப்படுகிறது. இதனால் கதிரேசன் மனமுடைந்த நிலையில், இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கினார். இதைப்பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கதிரேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story