லாரி டிரைவர் திடீர் சாவு


லாரி டிரைவர் திடீர் சாவு
x

லாரி டிரைவர் திடீர் இறந்து போனார்.

கரூர்

தளவாபாளையம் அருகே குன்னிக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). லாரி டிரைவர். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் இருந்தபோது மணிகண்டன் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மணிகண்டனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மணிகண்டனின் மனைவி சகுந்தலாதேவி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story