லாட்டரி விற்றவர் கைது

கோத்தகிரியில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் கோத்தகிரி சப் -இன்ஸ்பெக்டர் யாதவ கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பேன்சி கடை ஒன்றில் சிவகுமார் (வயது 39) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் வெளிமாநில லாட்டரிகளை விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





