லாட்டரி சீட்டுகள் விற்றவர் சிக்கினார்

கூடலூர் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர் அருகே லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான போலீசார் புது ரோடு, அம்பேத்கர் காலனி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லோயர்கேம்ப் பஸ் நிறுத்தம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், தேனி ஊஞ்சாம்பட்டியை சேர்ந்த குருசாமி (வயது 76) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1,640 மதிப்புள்ள 41 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





