காதல் ஜோடி தஞ்சம்


காதல் ஜோடி தஞ்சம்
x

வடமதுரை போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம் அடைந்தது.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் பானுப்பிரியா (வயது 21). இவருக்கும், பக்கத்து ஊரான கொல்லப்பட்டியை சேர்ந்த மில் தொழிலாளி அஸ்வின்குமார் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த சில மாதங்களாக 2 பேரும் காதலித்து வந்தனர். ஆனால் அவர்களது காதலுக்கு இருதரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பானுப்பிரியாவும், அஸ்வின்குமாரும் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

இதற்கிடையே பானுப்பிரியாவின் பெற்றோர், தங்களது மகளை காணவில்லை என்று வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தங்களை தேடுவதை அறிந்த காதலர்கள் 2 பேரும் நேற்று வடமதுரை போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. காதலர்கள் 2 பேரும் மேஜர் என்பதால், அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.


Next Story