காதல்ஜோடி தஞ்சம்


காதல்ஜோடி தஞ்சம்
x

வடமதுரை போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள பிலாத்து பாரதிபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 21). ஆட்டோ டிரைவர். அய்யலூர் அருகே உள்ள வேங்கனூரை சேர்ந்தவர் மகாலட்சுமி (19). மில் தொழிலாளி. இவர்கள் 2 பேரும், கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு அவர்கள் வெறியேறினர். பின்னர் அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் மகாலட்சுமியின் பெற்றோர், தனது மகளை காணவில்லை என்று வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தேடுவதை அறிந்த காதல்ஜோடி, வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் செல்வக்குமாரின் பெற்றோர், காதலை ஏற்றுக்கொண்டதால் அவர்களுடன் மணமக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story