பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்


பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
x

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

நாமக்கல்

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையம் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சின்னாக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மோகன்ராஜ் (வயது 27). இவர் பரமத்திவேலூரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். அதே பகுதிைய சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகள் கமலி (22). பி.எஸ்சி. படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

ேமாகன்ராஜ், கமலி ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திருமணம் செய்ய முடிவு செய்த காதல் ஜோடிகள் நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் நேற்று அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருதரப்பு பெற்றோர்களும் காதல் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கமலியை அவருடைய கணவர் மோகன்ராஜ் உடன் அனுப்பி வைத்தனர்.


Next Story