தஞ்சை பெரியகோவில், மணிமண்டபத்தில் குவிந்த காதலர்கள்


தஞ்சை பெரியகோவில், மணிமண்டபத்தில் குவிந்த காதலர்கள்
x

தஞ்சை பெரியகோவில், மணிமண்டபத்தில் குவிந்த காதலர்கள்

தஞ்சாவூர்

காதலர் தினத்தையொட்டி தஞ்சை பெரியகோவில், மணிமண்டபத்தில் காதலர்கள் குவிந்தனர். தனித்தனியாக கோவிலுக்குள் சென்றவர்களையும் போாலீசார் பிரித்து அனுப்பிவைத்தனர்.

காதலர் தினம்

உலகம் முழுவதும் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தையொட்டி தஞ்சையில் உள்ள சுற்றுலா தலங்களான பெரியகோவில், மணி மண்டபம் போன்ற இடங்களி்ல் காதல் ஜோடிகளின் கூட்டம் அலைமோதியது. தஞ்சை பெரிய கோவிலில் காதல் ஜோடியினர் நேற்று தனித்தனியாக கோவிலுக்குள் சென்று அங்கே சேர்ந்து கொண்டனர். அவர்களை போலீசார் கண்டறிந்து காதல் ஜோடியினரை எச்சரித்து அனுப்பினர்.

காதல் ஜோடியினர் பொது இடங்களில் அத்துமீறாமல் இருக்கவும், அதே சமயம் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் காதல் ஜோடிகளை தொந்தரவு செய்யாமல் இருக்கவும் போலீசார் பெரிய கோவில் முன்பும், கோவில் வளாகத்திலும், தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மணிமண்டபம்

இதனால் பெரியகோவிலை விட்டு வெளியேறிய காதல் ஜோடியினர் மணிமண்டபத்திற்கு படை எடுத்துனர. பின்னர் அங்கு காதல் ஜோடியினர் கரம் கோர்த்தபடியும், தோளில் கைபோட்ட படியும் மணிமண்டபத்தை சுற்றி வலம் வந்தனர். ஒரு சிலர் ஒரே மாதிரியான உடைகளை அணிந்து கொண்டு வந்தனர்.

அங்கு ரோஜா பூக்களை கொடுத்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து தங்கள் காதலின் அன்பை வெளிப்படுத்தி கொண்டனர். மேலும் மறைவான இடங்களில் அமர்ந்து கொஞ்சி மகிழ்ந்தனர்.

செல்பி எடுத்த காதலர்கள்

காதலர் தினத்தை நினைவுகூரும் வகையில் காதல் ஜோடியினர் செல்போன் மூலம் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கடை வீதிகளில் உள்ள பரிசு கடைகளில் காதலர்கள் பலரும் கூடி நின்று தங்கள் பெயர்களை ஆரம்பிக்கும் எழுத்துக்களை வாங்கி ஒருவருக்கொருவர் பரிசளித்து மகிழ்ந்தனர். இதே போல ஒரே அரிசியில் காதல் ஜோடியினர் இருவர் பெயரையும் பதிவு செய்தனர். அவற்றை ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களாக வழங்கி மகிழ்ந்தனர்.

காதலர் தினத்தை யொட்டி தஞ்சையில் பெரிய கோவில், மணிமண்டபம், அரண்மனை போன்ற இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் மறைவான இடங்களில் அமர்ந்து அத்துமீறிய சில காதல் ஜோடிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Next Story