வெறிநாய்கள் அட்டகாசம்: பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்ததில் 68 ஆடுகள் உயிரிழப்பு...


வெறிநாய்கள் அட்டகாசம்: பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்ததில்  68 ஆடுகள் உயிரிழப்பு...
x

ராமநாதபுரம் அருகே வெறிநாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்ததில், 68-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே வெறிநாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்ததில், 68-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. இருபதுக்கும் மேற்பட்ட ஆடுகள் காயம் அடைந்தன.

திருப்புல்லாணி அருகே உள்ள முடுக்குத் தரவை கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர், 200-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இன்று அதிகாலை பத்துக்கு மேற்பட்ட வெறிநாய்கள் பட்டிக்குள் புகுந்து, ஆடுகளை துடிக்க துடிக்க கடித்து குதறியுள்ளது. இதில் 68 ஆடுகள் உயிரிழந்தன.

இருபதுக்கும் மேற்பட்ட ஆடுகள் காயம் அடைந்தன. இதன் மதிப்பு 5 லட்ச ரூபாய் என தெரிவித்த அதன் உரிமையாளர் லட்சுமி, உயிரிழந்த ஆடுகளுக்கு அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.


Next Story