சங்கராபுரம் அருகே மகாமாரியம்மன் கோவில் தேரோட்டம்


சங்கராபுரம் அருகே மகாமாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

சங்கராபுரம் அருகே மகாமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே திம்மனந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி புதிதாக ரூ.5 லட்சத்தில் தேர் செய்யப்பட்டிருந்தது. மேலும் விழாவில் சக்தி அழைத்தல், காப்புக்கட்டுதல் அய்யனாருக்கு ஊரணி பொங்கல் வைத்தல், சாகை வார்த்தல், குத்து விளக்கு பூஜை, காத்தவராயன் ஆரியமாலா திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி மகாமாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் மகாமாரியம்மன் எழுந்தருளினார். இதையடுத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தேரோட்டம் நடைபெற்றது. தேரை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story