அறுவடைக்கு தயார்நிலையில் மக்காச்சோளம்


அறுவடைக்கு தயார்நிலையில் மக்காச்சோளம்
x

வத்திராயிருப்பு பகுதிகளில் அறுவடைக்கு மக்காச்சோளம் தயார் நிலையில் உள்ளது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு பகுதிகளில் அறுவடைக்கு மக்காச்சோளம் தயார் நிலையில் உள்ளது.

மக்காச்சோளம் சாகுபடி

வத்திராயிருப்பு, அர்ச்சுனாபுரம், கான்சாபுரம், அத்தி கோவில், வ.மீனாட்சிபுரம், தாணிப்பாறை, சுந்தரபாண்டியம், கோட்டையூர், இலந்தைகுளம், தைலாபுரம், அக்கணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்ேபாது இந்த சோளமானது அறுவடை செய்யும் தருணத்தில் உள்ளது. வழக்கத்தை காட்டிலும் இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பெய்த தொடர் மழையால் இப்பகுதியில் உள்ள கண்மாய்களிலும், கிணறுகளிலும் விவசாயம் செய்வதற்கு போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் தற்போது மக்காச்ேசாளத்தில் நல்ல விளைச்சல் உள்ளது.

இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் மக்காச்சோளம் அறுவடை செய்யப்பட உள்ளது. நல்ல விளைச்சல் இருப்பதால் நாங்கள் எதிர்பார்த்த விலையும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நல்ல விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story