ஓடும் ரெயிலில் ஆண் பிணம்

நெல்லையில் ஓடும் ரெயிலில் ஆண் பிணமாக கிடந்தார்.
மராட்டிய மாநிலம் தாதரில் இருந்து நெல்லைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3-வது பெட்டியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அந்த ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும் இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ரெயில்வே போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





