ஊட்டியில், பிளஸ்-2 கணித ேதர்வில் ஆசிரியர்களுடன் முறைகேடு:34 மாணவ -மாணவிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு


ஊட்டியில், பிளஸ்-2 கணித ேதர்வில் ஆசிரியர்களுடன் முறைகேடு:34 மாணவ -மாணவிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு
x
தினத்தந்தி 8 May 2023 7:45 PM GMT (Updated: 8 May 2023 7:45 PM GMT)

ஊட்டியில் பிளஸ்-2 கணித தேர்வில் ஆசிரியர்களுடன் முறைகேடுவில் ஈடுபட்ட 34 மாணவ-மாணவிகளின் கணித தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் பிளஸ்-2 கணித தேர்வில் ஆசிரியர்களுடன் முறைகேடுவில் ஈடுபட்ட 34 மாணவ-மாணவிகளின் கணித தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி 3-ந் தேதி வரையும், பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 14-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி வரை நடைபெற்றது.

இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத நீலகிரி மாவட்டத்தில் 41 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அவற்றில் 3,525 மாணவர்கள், 3,915 மாணவிகள் என 7,440 எழுதினர்

மேல்நிலைத் தேர்வுக்காக 44 முதன்மை கண்காணிப்பாளர்கள், 43 துறை அலுவலர்கள், 86 அலுவலக பணியாளர்கள், 574 அறை கண்காணிப்பாளர்கள், 14 வினாத்தாள் வழித்தட அலுவலர்கள் என 761 ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் முறைகேடுகள் ஈடுபடுவது தவிர்க்க 69 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது.

கணித தேர்வில் முறைகேடு

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த மார்ச் 27-ந் தேதி நடந்த கணித தேர்வில் மாணவ- மாணவிகள் ஒரு சிலருக்கு தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் விடை எழுத உதவி செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி சென்னை பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தேர்வில் விடை எழுத மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் உதவியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலர் சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு

முதலில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கணித தேர்வு எழுதிய 34 மாணவ- மாணவிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி கூறுகையில், தேர்வு முறைகேடு சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட்டு ஏற்கனவே 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கிடையே கணித தேர்வு நடந்த அன்றைய தினம் மாணவர்களின் வினாத்தாள்கள் அரசு தேர்வுகள் இயக்கதத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்கம் முடிவு செய்யும் என்றார்.



Next Story