தூத்துக்குடியில் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது


தூத்துக்குடியில் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. இவருடைய மகன் பாஸ்கர் (வயது 49). தொழிலாளி. இவருக்கும், ஓட்டப்பிடாரம் கே.சண்முகபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் முத்துக்குமார் (33) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வருகிறது. சம்பவத்தன்று பாஸ்கர் தூத்துக்குடி வ.உ.சி மீன் மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த முத்துக்குமார், பாஸ்கரிடம் தகராறு செய்து அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தார்.

1 More update

Next Story