போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் சென்று திரும்பியவர் கைது

போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் சென்று திரும்பியவர் கைது செய்யப்பட்டார்.
செம்பட்டு:
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளை இமிகிரேசன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கை மாவட்டம் திருமயம் இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி(வயது 50) என்பவர், போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்று சிங்கப்பூர் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





