கடலில் மூழ்கி வாலிபர் சாவு

கடலில் மூழ்கி வாலிபர் இறந்தார்.
நாகப்பட்டினம்
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆனந்தபுரம் மைசூர் சாலை 11-வது குறுக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் கர்ணா. இவருடைய மகன் விக்ரம் (வயது 21). தொழிலாளி. இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் நேற்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தார். அப்போது கடலில் குளித்த விக்ரமை அலை கடலுக்குள் இழுத்து சென்றது. கடலில் மூழ்கிய அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தேடிப்பார்த்தனர். இந்த நிலையில் சிறிது நேரத்துக்கு பிறகு விக்ரம் பிணமாக கரை ஒதுங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி கடலோர காவல்படை போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வேளாங்கண்ணி கடலோர காவல்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story






