மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
x

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் இறந்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், அய்யலூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜ்கரன் (வயது 32). டிரைவர். இவர் கடந்த 17-ந்தேதி இரவு சிறுவாச்சூரில் இருந்து அய்யலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சிறுவாச்சூர்-அய்யலூர் பிரிவு சாலையில் பிள்ளையார் கோவில் எதிரே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து ராஜ்கரன் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜ்கரன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story