ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை; மோட்டார் சைக்கிளில் ஏறச்சொல்லி ரகளை செய்த வாலிபர் கைது


ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை; மோட்டார் சைக்கிளில் ஏறச்சொல்லி ரகளை செய்த வாலிபர் கைது
x

ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஏறச்சொல்லி ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த மாணவியிடம் வாலிபர் ஒருவர், அன்பு தொல்லை கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏறி உட்காரும்படி வற்புறுத்தினார். மாணவி மறுத்தார். தானும் அதே ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவர் என்றும், அந்த வாலிபர் விடாமல் மாணவியிடம் ரகளையில் ஈடுபட்டார். இதுபற்றி தகவல் தெரிந்த ஐ.ஐ.டி. காவலாளி ஒருவர் அங்கு வந்து, குறிப்பிட்ட வாலிபரை எச்சரித்தார். மாணவியை அங்கிருந்து செல்லும்படி அனுப்பிவைத்தார். இது குறித்த புகாரில் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்த் எட்வர்ட் (வயது 34) என்பவரை கைது செய்தனர்.

வேளச்சேரி, தண்டீஸ்வரம் பகுதியைச்சேர்ந்த இவர், ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள உணவகத்தில் முன்பு ஊழியராக வேலை செய்ததாக தெரிகிறது. அந்த பழக்கத்தில் ஐ.ஐ.டி. வளாகத்துக்குள் அடிக்கடி வந்துசெல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது, தனிமையில் சென்ற மாணவியிடம், தானும் மாணவன்தான் என்று சொல்லி, பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story