மது போதையில் நண்பரை கொன்றவர் கைது


மது போதையில் நண்பரை கொன்றவர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2023 1:45 AM IST (Updated: 30 Sept 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

மது போதையில் நண்பரை கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை

மதுரை ஆரப்பாளையம், டி.டி.சாலையில் வைகை ஆற்று பகுதியில் கடந்த 25-ந்தேதி வாலிபர் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து கரிமேடு போலீசார் நடத்திய விசாரணையில் கொலையான நபர், விளாங்குடி பகுதியைச் சேர்ந்த முத்துமணி (வயது 28) என்பதும், புகைப்பட கலைஞராக தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. விசாரணையில் மதுரை தத்தனேரி பாரதி நகரைச் சேர்ந்த கொத்தனார் இளங்கோவனுடன் (28) அவர் சென்றதை பார்த்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் இளங்கோவனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முத்துமணியை மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததை இளங்கோவன் ஒப்புக்கொண்டதை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story