ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
x

ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை-செங்கம் சாலை வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் கடத்தல் குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தி வந்த தண்டராம்பட்டு தாலுகா மேல் சிறுபாக்கம் புதூர் பகுதியை சேர்ந்த வடிவேலு (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் ஆட்டோவில் இருந்த 50 கிலோ எடை உள்ள 10 மூட்டைகளில் இருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.


Next Story