ஆட்டோவில் கஞ்சா விற்றவர் கைது

அம்பையில் ஆட்டோவில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
அம்பை:
அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார், அம்பை- வாகைக்குளம் ரோட்டில் துணை மின்நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அம்பை கவுதமபுரி தெற்கு தெருவைச் சேர்ந்த முருகேஷ் (வயது 30) என்பவர் ஓட்டி வந்த ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்தனர்.
இதில், அவர் விற்பனைக்காக 32 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்து, கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





