மானாமதுரையில் மதுக்கடையில் திருடியவர் சிக்கினார்

மானாமதுரையில் மதுக்கடையில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை
மானாமதுரை
மானாமதுரை கண்ணார் தெருவில் அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி மதுக்கடை பூட்டு உடைக்கப்பட்டு ரூ.1½ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்டன. இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க துணை சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் மதுக்கடையில் திருடியது தொடர்பாக திருப்புவனம் அருகே வடகரையை சேர்ந்த செல்வக்குமார்(வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story






