மஞ்சளாறு அணை நீர்மட்டம் 53 அடியாக உயர்வு

மஞ்சளாறு அணை நீர்மட்டம் 53 அடியாக உயர்ந்தது
தேவதானப்பட்டியில் 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணை உள்ளது. கடந்த 3 வாரங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதற்கிடையே அணையின் நீர்மட்டம் கடந்த 27-ந்தேதி 51 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் இன்று அணையின் நீர்மட்டம் 53.4 அடியாக உயர்ந்தது. இதனால் பொதுப்பணித்துறையினர் 2-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை. நீர்வரத்து வினாடிக்கு 272 அடியாக உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





