மஞ்சளாறு அணை நீர்மட்டம் 53 அடியாக உயர்வு


மஞ்சளாறு அணை நீர்மட்டம் 53 அடியாக உயர்வு
x

மஞ்சளாறு அணை நீர்மட்டம் 53 அடியாக உயர்ந்தது

தேனி

தேவதானப்பட்டியில் 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணை உள்ளது. கடந்த 3 வாரங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதற்கிடையே அணையின் நீர்மட்டம் கடந்த 27-ந்தேதி 51 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் இன்று அணையின் நீர்மட்டம் 53.4 அடியாக உயர்ந்தது. இதனால் பொதுப்பணித்துறையினர் 2-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை. நீர்வரத்து வினாடிக்கு 272 அடியாக உள்ளது.


Next Story