மார்கழி மாத பிறப்பையொட்டி ராமேஸ்வரம் கோவில் நடை இன்று அதிகாலை 3.30 மணிக்கு திறப்பு


மார்கழி மாத பிறப்பையொட்டி ராமேஸ்வரம் கோவில் நடை இன்று அதிகாலை 3.30 மணிக்கு திறப்பு
x

தனுர்மாத பூஜையை முன்னிட்டு அடுத்த மாதம் 14-ந்தேதி வரை அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்த மாதம் 14-ந்தேதி வரை தனுர்மாத பூஜையை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனுர்மாத பூஜை - நடை திறப்பு விவரம் தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது;

"அருள்மிகு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில், சோபகிருது வருடம், மார்கழி மாதம் 1-ம் தேதி 17.12.2023 (ஞாயிறு) முதல் 14.01.2024 வரை, தனுர்மாத பூஜையை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு திருக்கோவில் நடை திறந்து அதிகாலை 4.00 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை தரிசனம் நடைபெற்று, காலை 5.00 மணிக்கு தனுர்மாத திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்று தேவாரம், திருவெம்பாவை ஓதுதல் தீபாராதனை நடைபெறும்.

காலை 6.00 மணிக்கு திருவனந்தல் பூஜை

காலை 7.30 மணிக்கு விளா பூஜை

காலை 10.00 மணிக்கு கால சந்தி பூஜை

பகல் 12.00 மணிக்கு உச்சி கால பூஜை

நண்பகல் 1.00 மணிக்கு திருக்கோயில் நடை சாத்தப்படும்.

மீண்டும் பிற்பகல் 3.00 மணிக்கு நடை திறந்து 3.30 மணிக்கு பொது தரிசனம் நடைபெறும்.

மாலை 6.00 மணிக்கு சாயரட்சை பூஜை

இரவு 8.00 மணிக்கு அர்த்தஜாம பூஜை

இரவு 8.30 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெறும்.

உற்சவ காலங்கள் மற்றும் சுவாமி புறப்பாடு காலங்களில் மேற்சொன்ன பூஜை நேரங்கள் மாறுதலுக்குட்பட்டது என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது."

இவ்வாறு ராமேஸ்வரம் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story