கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.56 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்


கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.56 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்
x

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.56 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது.

ஈரோடு

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.56 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது.

நாட்டு சர்க்கரை ஏலம்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 2 ஆயிரத்து 647 மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

ரூ.56 லட்சம்

இதில் 60 கிலோ கொண்ட முதல் ரக (திடம்) நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக 2 ஆயிரத்து 410 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2 ஆயிரத்து 415 ரூபாய்க்கும், மீடியம் ரக நாட்டு சர்க்கரை ஒரே விலையாக 2 ஆயிரத்து 350 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நாட்டு சர்க்கரை மொத்தம் ரூ.55 லட்சத்து 78 ஆயிரத்து 165 ரூபாய்க்கு ஏலம் போனது.

இந்த நாட்டு சர்க்கரை பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.


Next Story