திருமண மண்டப மேற்பார்வையாளர் சாவு


திருமண மண்டப மேற்பார்வையாளர் சாவு
x
தினத்தந்தி 15 Aug 2023 2:00 AM IST (Updated: 15 Aug 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

திருமண மண்டப மேற்பார்வையாளர் சாவு

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

கிணத்துக்கடவு அருகே பனப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது 45). இவர் கோவை ராம் நகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் பழனிச்சாமி சுல்தான்பேட்டை அருகே செஞ்சேரிமலைக்கு வந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். வடவள்ளி பழைய இரும்பு கம்பெனி அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே பழனிச்சாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Related Tags :
Next Story