மாசி மாத பவுர்ணமி: சதுரகிரிக்கு செல்ல 5 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி


மாசி மாத பவுர்ணமி: சதுரகிரிக்கு செல்ல 5 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
x
தினத்தந்தி 1 March 2023 6:22 PM GMT (Updated: 1 March 2023 6:26 PM GMT)

மாசி மாத பவுர்ணமியையொட்டி சதுரகிரி கோவிலுக்குச் செல்ல 5 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் மாசி மாத பவுர்ணமியே முன்னிட்டு வருகிற 4-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வகம் அனுமதி அளித்துள்ளனர்.

மேலும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. வெளியில் காலம் ஆரம்பித்துள்ளதால் மலைப்பகுதிக்கு எளிதில் தீப் பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பிரதோஷம் மற்றும் வரும் 4ந் தேதி சனி பிரதோஷம் மற்றும் வரும் 7ந் தேதி மாசி மாத பவுர்ணமி ஆகிய தினங்களில்பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story