மதுரை கள்ளழகர் கோவிலில் இன்று மாசி தெப்ப உற்சவ விழா..!


மதுரை கள்ளழகர் கோவிலில் இன்று மாசி தெப்ப உற்சவ விழா..!
x

இந்த ஆண்டுக்காண தெப்ப உற்சவ விழா நேற்று (6-ந்தேதி) மாலை கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கியது.

அலங்காநல்லூர்,

திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி புகழப்படுவது மதுரையை அடுத்த அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில் மாசி மாதம் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்காண தெப்ப உற்சவ விழா நேற்று (6-ந்தேதி) மாலை கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் இன்று (செவ்வாய் கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 7.02 மணிக்கு மேல் 7.50 மணிக்குள் தேவி பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பாடாகி செல்கிறார்.

மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைப்பட்டி புஸ்கரணிக்கு செல்லும் வழி நெடுகிலும் நின்ற சேவை சாதித்து தொடர்ந்து பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்தில் சுவாமி- அம்பாள் எழுந்தருளு கிறார்கள். அங்கு பகல் 10.30 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் தெப்பத்தின் கிழக்குபுறம் உள்ள மண்ட பத்தில் எழுந்தருளி பகல், மாலையில் சுவாமி தெப்பத்தில் எழுந்தருளுகிறார்.

தெப்ப உற்சவத்தை காண சுற்று வட்டாரத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். தொடர்ந்து நாளை இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு போய் இருப்பிடம் சேருகிறார். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story