கொத்தனார் கைது


கொத்தனார் கைது
x
தினத்தந்தி 16 Aug 2023 1:45 AM IST (Updated: 16 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

சாணார்பட்டி அருகே பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே உள்ள மடூர் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 40). கொத்தனார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் 33 வயது பெண்ணை குணசேகரன் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இதில், அந்த பெண் கர்ப்பமானார். இதையடுத்து அந்த பெண், தன்னை திருமணம் செய்துகொள்ள குணசேகரனை வற்புறுத்தினார். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் அந்த பெண், இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story