கிணற்றில் பிணமாக மிதந்த கொத்தனார்


கிணற்றில் பிணமாக மிதந்த கொத்தனார்
x

கிணற்றில் கொத்தனார் பிணமாக மிதந்தார்.

பெரம்பலூர்

கொத்தனார்

பெரம்பலூர் அருகே நொச்சியம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரவி(வயது 45). கொத்தனார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. ரவிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 10-ந்தேதி மதியம் வீட்டை விட்டு ரவி வெளியே சென்றார். பின்னர் மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. சில சமயங்களில் ரவி வீட்டை விட்டு வெளியே சென்றால் 3 நாட்கள் கழித்துதான் வீட்டிற்கு வருவார் என்றும், இதனால் ரவியை அவரது குடும்பத்தினர் தேடவில்லை என்றும் கூறப்படுகிறது.

கிணற்றில் பிணம்

இந்த நிலையில் நேற்று காலை ரவியின் இளைய மகன் ராஜ்குமார், இயற்கை உபாதை கழிப்பதற்காக அதே பகுதியில் உள்ள தங்களது வயல் காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் வயலில் உள்ள கிணற்றை எட்டி பார்த்தபோது, தண்ணீரில் ரவி பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது பற்றி அவர் தனது குடும்பத்தினர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

இதையடுத்து பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவழைக்கப்பட்டு கிணற்றில் இருந்து ரவியின் உடல் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவி குடிபோதையில் வயலுக்கு சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story