மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2 Feb 2023 6:46 PM GMT)

உடன்குடிபள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உதயகுமார் முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாவட்ட திட்ட அலுவலர் பெர்சியாள், வட்டார கல்வி அலுவலர் ஜெயவதி ரத்னாவதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசெல்வி, தலைமை ஆசிரியர் லிவிங்ஸ்டன் ஆகியேர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் மருத்துவ சான்றிதழ், தேசிய அடையாள அட்டை பதிவு செய்தல், பதிவை புதுப்பித்தல், தனித்துவ அடையாள அட்டைக்கான பதவி, ெரயில் மற்றும் போக்குவரத்து சலுகை, உபகரணங்கள் பெற உதவி, உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை வட்டார வளயை மேற்பார்வையாளர் சாந்தி தலைமையில் ஆசிரிய பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர்.


Next Story