ஓசூரில் அ.தி.மு.க. சார்பில்அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்


ஓசூரில் அ.தி.மு.க. சார்பில்அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
x

ஓசூரில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில், அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநகர மேற்கு பகுதி செயலாளர் மஞ்சுநாத் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், மாநகர வடக்கு பகுதி செயலாளர் அசோகா, பகுதி செயலாளா்கள் வாசுதேவன், ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிகுமார் வரவேற்றார். இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி, மாநில வக்கீல் பிரிவு துணை செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.ராஜேந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், வட்ட செயலாளர் கும்மி ஹேமகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் கிருஷ்ணன், துணை செயலாளர் சாக்கப்பா, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் சக்திவேல், நாராயண ரெட்டி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட செயலாளர் குபேரன் நன்றி கூறினார்.


Next Story