தர்மபுரி கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-நாளை நடக்கிறது


தர்மபுரி கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி உதவி கலெக்டர் கீதாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமையில் நடத்த மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி நடப்பு மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்கள் குறைகள், கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story