மேகதாது விவகாரம்: நாளை முதல்வருடன் ஆலோசனை - துரைமுருகன் தகவல்


மேகதாது விவகாரம்: நாளை முதல்வருடன் ஆலோசனை - துரைமுருகன் தகவல்
x

மேகதாது விவகாரம் குறித்து நாளை காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் காவிரி உபரி நீரை பயன்படுத்த தமிழ்நாடு சட்டவிரோத திட்டங்களை அமல்படுத்துவதாக மத்திய அரசிடம் அம்மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு புகார் கூறியுள்ளார். மேலும் மேகதாது திட்டத்திற்கு உடனே அனுமதி வழங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் மேகதாது விவகாரம் குறித்து நாளை காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, "மேகதாது விவகாரம் குறித்து நாளை காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அதைத் தொடர்ந்து டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரியத்திலும் மேகதாது குறித்து ஆலோசிக்க உள்ளேன்" என்று கூறினார்.


Next Story