மேட்டுநாசுவன்பாளையம் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு


மேட்டுநாசுவன்பாளையம் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு
x

மேட்டுநாசுவன்பாளையம் ஊராட்சியில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு

பவானி

மேட்டுநாசுவன்பாளையம் ஊராட்சியில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊராட்சி மன்ற அலுவலகம்

பவானி அருகே உள்ள மேட்டுநாசுவன்பாளையம் ஊராட்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா சென்றார்.

அப்போது அவர் ஊராட்சிக்குட்பட்ட காலிங்கராயன்பாளையம் பகுதியில் 15-வது நிதி குழு மாநில திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினையும், லட்சுமி நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றுப்பண்ணை, தெற்கு தெரு பகுதியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடு, மணக்காட்டூர் பகுதியில் ரூ.16 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டும் பணியையும் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.

பதிவேடுகளை பார்வையிட்டார்

முன்னதாக மேட்டுநாசுவன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு நேரில் சென்று பார்வையிட்ட கலெக்டர், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை பதிவேடுகளை பார்வையிட்டாா்.

பின்னர் அங்குள்ள அலுவலக கோப்புகளில் உள்ள குறிப்புகள் குறித்து கேட்டறிந்து தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுரை கூறினார். தொடர்ந்து கணினி அறை மற்றும் பதிவு அறை ஆகியவற்றை பார்வையிட்டு அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

வகுப்பறை கட்டிட பணி

இதேபோல் சித்தோடு அருகே உள்ள பேரோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு தொடக்கப்பள்ளி கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடங்கள் புதுப்பிக்கும் பணியையும், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை முதல் குமரன் நகர் கடைசி வரை மெட்டல் ரோடு போட்டு தார் சாலை அமைக்கும் பணியையும், கரட்டுப்பாளையம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.20 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டார்

இந்த ஆய்வின்போது உதவி பயிற்சியாளர் பொன்மணி மற்றும் விநாயக்குமார் மீனா மற்றும் ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர் சரஸ்வதி ஆகியோர் உடன் இருந்தனர்


Next Story