பால்குட ஊர்வலம்
புது பல்லகச்சேரி கிராமத்தில் பால்குட ஊர்வலம்
கள்ளக்குறிச்சி
தியாகதுருகம்
தியாகதுருகம் அருகே புது பல்லகச்சேரி கிராமத்தில் ஸ்ரீ மின்னல் காளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 5-ம் ஆண்டு பால்குடம் சுமக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு கிராமத்தில் இருந்து மேளதாள இசையுடன் பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று வயல் வெளிப்பகுதியில் உள்ள கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து மின்னல் காளி அம்மனுக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story