மினிலாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; 3 பேர் படுகாயம்


மினிலாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 8 Aug 2023 12:30 AM IST (Updated: 8 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

மினிலாரி-மோட்டார் சைக்கிள் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 45). இவரது மனைவி பேச்சியம்மாள் (40). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சுரண்டைக்கு வந்துவிட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தனர்.

சுந்தரபாண்டியாபுரம் விலக்கில் இடது பக்கம் திரும்பும் போது எதிர்பாராத விதமாக பின்னால் இருந்து வந்த மினிலாரி, மோட்டார் சைக்கிளில் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் ராமச்சந்திரன், பேச்சியம்மாள் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மோதிய வேகத்தில் மினி லாரியும் கவிழ்ந்தது. இதில் டிரைவர் முரளியும் (25) பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சுரண்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ராமச்சந்திரன், பேச்சியம்மாள் ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story