காவிரி-குண்டாறு திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

காவிரி-குண்டாறு திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டி உள்ளார்.
காவிரி-குண்டாறு திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டி உள்ளார்.
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம்
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் அ.தி.மு.க.வின் திட்டமல்ல. அது மத்திய அரசு திட்டம், அந்த திட்டத்தினை விரைந்து முடிக்க மத்திய அரசு முனைப்பு காட்ட வில்லை. மத்திய அரசு மற்றும் உலக வங்கி மூலம் நிதி பெற்றால் மட்டுமே இந்த திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்த முடியும்.தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் மீதான தாக்குதல் நடத்தப்படாமலேயே நடத்தப்பட்டதாக கூறுவது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் வெற்றியை திசை திருப்புவதற்காக செய்யும் சிறுபிள்ளைத்தனமான செயல்.
தி.மு.க. ஒருபோதும் வெறுப்பு அரசியலில் ஈடுபடாமல், விருப்பு அரசியலில் மட்டுமே ஈடுபடும். தி.மு.க. அரசை கவிழ்க்க முயல்வதாக தி.மு.க. தலைவர் கூறி இருப்பது என்னைவிட அவருக்கு அதிகம் தெரியும் என்பதை உணர்த்துகிறது.
அ.தி.மு.க. அரசின் திட்டங்கள்
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களை தற்போது ஆளும் தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் ஆளும் கட்சியாக மாறும் போது பழைய செயல்பாடுகளை முடக்கப் பார்ப்பார்கள். ஆனால் தி.மு.க. அரசு அ.தி.மு.க. அரசின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி உடன் இருந்தார்.






