மேயர்- கவுன்சிலர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கலந்தாய்வு


மேயர்- கவுன்சிலர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கலந்தாய்வு
x

நெல்லை மாநகராட்சியில் மேயர், கவுன்சிலர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கலந்தாய்வு நடத்தினார்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் சென்றனர். அவர்களை மேயர் பி.எம்.சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி வரவேற்றனர்.

தொடர்ந்து மாநகராட்சியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், பணிகள் குறித்து மேயர், துணை மேயர், கவுன்சிலர்களுடன் அமைச்சர் கே.என்.நேரு கூட்டரங்கில் கலந்தாய்வு நடத்தினார். அப்போது அவர், மாநகராட்சியில் பணிகள் தொய்வடையாமல் பார்த்து கொள்ள வேண்டும். மாநகராட்சியில் நல்ல நிர்வாகம் மற்றும் மக்கள் பணி சிறப்பாக நடைபெற கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும். ஒவ்வொரு வார்டுக்கும் என்னென்ன தேவை என்பதை மேயர் மற்றும் ஆணையாளர் பார்த்து அந்த கவுன்சிலர்களுடன் ஆலோசனை செய்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.


Next Story