டெல்டா குறுவை பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் நிவாரணம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை,
டெல்டா மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்து வரும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10.30 மணியளவில் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.
வேளாண் துறை ஆணையர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஆய்வு செய்யும் நிலையில் குறுவை பாதிப்பு, நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
போதிய நீர் கடைமடை வரை செல்லாததால் குறுவை சாகுபடி பாதிக்கபட்டதாக விவசாயிகள் கூறிய நிலையில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





