செல்போன் திருடிய வாலிபர் கைது


செல்போன் திருடிய வாலிபர் கைது
x

செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நாங்குநேரியை சேர்ந்தவர் சுந்தர் (வயது 26). இவர் நெல்லை பல்நோக்கு அரசு ஆஸ்பத்திரியில் உறவினர் சிகிச்சை பெற்று வருவதை பார்க்க வந்தார். நேற்று முன்தினம் அங்கு அவர் தூங்கி கொண்டிருந்த போது மர்மநபர் ஒருவர் அவரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் ஸ்ரீவைகுண்டம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (23) என்பதும் அவர் செல்போன் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story