பசு மாட்டின் தலையை துண்டித்து உடலை எடுத்துச் செல்லும் கும்பல்


பசு மாட்டின் தலையை துண்டித்து உடலை எடுத்துச் செல்லும் கும்பல்
x

சிதம்பரம் பகுதியில் பசு மாட்டின் தலையை துண்டித்து உடலை எடுத்துச் செல்லும் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்லும் பசுமாடுகள் காணாமல் போவதாக சிதம்பரம் தாலுகா போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்த நிலையில் நாஞ்சலூர், சிவாயம் பூலாமேடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயல்களில் பசு மாட்டின் தலை மட்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அதன் தோல் உரிக்கப்பட்டு தனியாக கிடந்தது ஆனால் பசுமாட்டின் உடலை காணவில்லை. இதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். விசாணையில், இறைச்சிக்காக ஒரு கும்பல் மாடுகளை கடத்தி, தலையை துண்டித்து உடலை எடுத்துச் சென்று விற்பனை செய்வது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story