ரூ.50 கோடியில் நடைபெறும் சாலை பணிகளை கண்காணிப்புகுழு ஆய்வு


ரூ.50 கோடியில் நடைபெறும் சாலை பணிகளை கண்காணிப்புகுழு ஆய்வு
x

திருப்பத்தூர் கோட்டத்தில் ரூ.50 கோடியில் நடைபெறும் சாலை பணிகளை கண்காணிப்புகுழு ஆய்வு

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் கோட்டத்தில் ரூ. 50 கோடியில் சாலை பணிகள் நடைபெற்றுவருகிறது. திருப்பத்தூர்- சிங்காரப்பேட்டை சாலை விரிவாக்கப் பணிகள், தர்மபுரி- திருப்பத்தூர்- ஒகேனக்கல் தார் சாலை அகலப்படுத்தும் பணி, ஜோலார்பேட்டை- நாட்டறம்பள்ளி சாலை மேம்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு பணிகளை நபார்டு கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் தேவராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

மேலும் திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பணிகள் தொடர்பாக அலுவலகக் கோப்புகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க தணிக்கை குழுவினர் உத்தரவிட்டனர். ஆய்வின்போது நபார்டு கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் சுந்தரமூர்த்தி, திருப்பத்தூர் கோட்டப் பொறியாளர் கே‌. லோகநாதன், உதவி கோட்ட பொறியாளர் மணிசுந்தரம், உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story