திசையன்விளை மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி


திசையன்விளை மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி
x

திசையன்விளை மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை அதிகரித்து உள்ளதால் முருங்கை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திசையன்விளை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் முருங்கை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் முருங்கைக்காய்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விநாயகர் சதூர்த்திக்கு முன்புவரை ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.15 முதல் ரூ.17 வரை விற்பனை செய்யப்பட்டது.

அதன்பிறகு விலை கிடுகிடுவென உயர்ந்து அன்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.57 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் முருங்கை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். திடீர் விலை உயர்வு பற்றி முருங்கைகாய் மொத்த வியாபாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது, சமிபத்தில் பெய்த கோடைமழையால் முருங்கை பூக்கள் உதிர்ந்துவிட்டது. இதனால் முருங்கைக்காய் உற்பத்தி குறைந்துவிட்டது. மேலும் கேரளாவில் நடைபெற உள்ள ஓணம் பண்டிகைக்கு அதிக அளவில் முருங்கைக்காய்கள் அனுப்பப்பட்டு வருவதால் விலை உயர்ந்துள்ளது என்று தெரிவித்தனர்.


Next Story