மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை


மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை
x

மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கல்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது 60). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மகன் இறந்து விட்டதால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது ஒட்டன் தழையை அரைத்து குடித்து விட்டு மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

இதனை கண்ட சீனிவாசன் அவரை சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story